பெண்ணியம் பேசுபவர்கள் தயவு செய்து, தங்கள் வீடு கண்ணாடியை சோதிக்கவும். நான் ஆணாதிக்கவாதி என்ற பகிரங்கபடுத்தால் உங்களை அதிரச்செய்தால், உதட்டளவு பேசி ஊருக்கு உபதேசம் செய்யும் வியாதிகளின் கதவை மெல்ல தட்டி பாருங்கள்.
ஒப்புதலே தவறை திருத்துவதற்கான முதல் அடி என்பதை உணருங்கள். முதலில் நான் இப்படி தான் என்ற ஈகோவிற்கு மஸாஜ் செய்யுங்கள். ஈகோ இல்லை என்று பெருமைபடுபவனே அதிகம் அகம் பிடித்தவன்.
பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்க ஆண்கள் என்ன கடவுளின் ஏகப்பிரிதிநிதியா? இங்கு ஆதிக்கச் செங்கோல் கைமாற்றப்படுவதில் ஏன் இத்தனை சண்டை, இவ்வளவு தாமதம். இதற்கு சட்டம் தேவையில்லை, மாறாக உனக்கானதை நீ பெற ஏன் இன்னொருவனை பிடுங்க எத்தனிக்கிறாய்? விரும்பி கொடு, விட்டு கொடு, ஏர்ரோட்டியின் அறிவும் ஆழமும் , உழுத பின்தான் தெரியும்.