இரண்டாம் உலகப்போரின் போது நடந்த (அ) நடத்தப்பட்ட பெங்கால் பஞ்சத்தில் , மனிதனை உண்ணும் கொடுரம் ஒன்றும் கூட நடை பெறவில்லையாம்.கூட்டு கொள்ளை தான் வழி என்றான பிறகு, உடல் வலிமை இன்றி விட்ட அரையில் செத்த கதைகள் நிறைய விரவி கிடக்கின்றன.
புயல், பஞ்சம், அதன் காரணமாக நீர்த்து போன வெள்ளையனே வெளியேறு இயக்கம் ,எல்லாம் அடுத்தடுத்து நிகழ்ந்த துர்சோகங்கள்.சோனா காச்சி , கம்முனிசம், பிரிவினைவாதம் வேரூன்றுவதற்கு செயற்கை பஞ்சம் காரணமாய் இருக்கக்கூடும் என்ற ஆழ்ந்த குழப்பத்தை நம்மனதில் விதைக்க தவறவில்லை இப்புத்தகம்.
ஹிட்லரை சந்தித்து பேசிய போஸ் , இங்கிலாந்து இந்தியாவை விட்டோட , தம்முடன் சேருமாறு அழைத்திருக்கிறார். அவர் மறுத்து விட ஜப்பான் சென்று அவர்களின் ஒத்துழைப்பில் , பிரிட்ஷ்ஷாரை விரட்ட திட்டம் தீட்டியிருக்கிறார்.பஞ்சம் உருவாகும் நிலையில் எச்சரித்தும், சர்ச்சில் உட்பட எவரும் செவி சாயக்கவில்லை.
அறிக்கை மேல் அறிக்கை அனுப்பியும் , சர்ச்சில் உலகப்போரில் குறியாய் இருந்தார். போர் முடியும் பட்சத்தில் , தன் நாட்டு மக்கள் உணவு இறக்குமதியால் பாதிக்கப்பட கூடாது என்பதில் தான் , அவர் கவனம் இருந்திருக்கிறது.ஒவ்வொரு அடுக்கிலும் , ஒவ்வொரு சால்ஜாப்பு சொல்லப்பட்டு ,பஞ்சம் பல் மடங்காக பெருக்கெடுக்க உந்துதலாக அமைந்த சோகம் பெரிய அவலம்.
- முதல் காரணம், இந்தியா உணவு உற்பத்தியில் கவனம் செலுத்த தவறி விட்டது
- இரண்டாவது காரணம், உணவு பதுக்கல் , பஞ்சம் என்னும் வதந்தி பரவ காரணமாக அமைந்து விட்டது
- மூன்றாவது காரணம், போரின் போது பஞ்சத்தை அழிக்க முறிபட்டால் ,பெங்கால் சிப்பாய்கள் கலகம் செய்ய கூடும்.
- நான்காவது காரணம்,இன்னும் சில ஆண்டுகள் கழித்து சுய அந்தஸ்து வழங்கப்பட்டு, நிர்கதியாய் விடப்பட வேண்டிய நாட்டை காப்பாற்ற எந்த முகாந்திரமும் இல்லை.
- ஐந்தாவது காரணம், 1857 சிப்பாய் கலகம் போல் இன்னொன்றை பிரிட்ஷ்ஷார் சந்திக்க விரும்ப வில்லை.
ஐரோப்பில் போர் முடிந்த நிலையில் அமெரிக்கா காலனி நாடுகளை ஐ.நா சபையின் கீழ் கொண்டுவர ரூஸ்வோல்ட்தீர்மானம்போட , சர்ச்சில இந்தியாவை விட்டுத்தர முடியாது என்று மறுத்து விட்டார். அதே சமயம் இந்தியாவுக்கு விடுதலை தரவும் மறுத்து விட்டார்.
1946இல் மறு தேர்தலை சந்தித்த சர்ச்சில் , எப்படியும் வென்று விடுவார் என்று நினைத்தார். அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்தார். பஞ்சம் பற்றிய செய்திகள் பிரித்தானிய மக்களை எப்படியோ எட்டியது.மக்களின் ஆதரவு நிலையை எடுக்க , இந்தியாவிற்கு விடுதலை தர முடிவெடுத்தார்.
இருந்தாலும் காலனியாதிக்கம், மக்கள எப்படி காப்பற்றியது என்று காட்டவும் , நாம் இல்லாவிட்டால் ஹிந்துவும் முஸ்லிமும் எப்படியெல்லாம் சண்டை போட்டு கொண்டிருப்பார்கள், தீண்டத்தகாதவர்களை ஒடுக்கியே வைத்திருப்பர்க்கள் என்றும் நிலை நாட்ட விரும்பினார்.
அதனால் , மத துவேஷத்தை தூண்டி , கலவரம் உருவாயிற்று. சுதந்திரத்திற்கு போராட வேண்டியவர்கள் , சண்டையிட்டு கொண்டனர். இருந்தாலும் பிரித்தானிய மக்கள் போர் கால பிரதமர் , சமாதான கால ஆட்சிக்கு தேவை இல்லை என்று நிராகரித்தனர்.மத கலவரங்கள் தடுக்க முடியாமலும், ஜின்னாவையும் காந்தியையும் ஒருமித்த கருத்துக்கு வர விடாமலும் , காய் நகர்த்தி நாட்டை துண்டாட நினைத்த பிரிட்டிஷாரின் நிறைவேறியது.
போர் காலத்தில் நடந்த விசாரணைகள் , தகவல் பரிவர்த்தனைகள் மெல்ல மெல்ல பொது தளத்திற்கு வெளி வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆவணம் 2016இல் வெளியாக இருக்கிறது. அதில் என்னென்ன சர்ச்சைகள் உருவாகுமோ?