வினோத வழக்கு
வரதட்சனை கேட்பது தவறு, மனைவியை அடிப்பது தவறு என்றார்கள் ஒத்து கொண்டோம் , தண்டனையும் பெற்றோம். இப்போது வீட்டுக்கு சொல்லாமல் லேட்டாக வந்தால் அதுவும் தவறு தான், இந்தியன் பீனல் கோடு தண்டிக்கும் அளவிற்கு. மும்பை ஹைகோர்ட் இதற்கு சாதகமாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
கணவர் வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், போலீஸிடம் புகார் கொடுக்க எண்ணியுள்ளார் ஒரு அன்பு மனைவி. ஆளில்லாத ஊரில் வெகு நேரம் தனியாக இருக்க நேரிட்டதாக புலம்புகிறார் இன்னொருவர். எல்லாம் கணவான்களின் தவறு , தண்டனைக்குரிய தவறு.
அடுத்து எது தவறென்பார்கள், மனைவியை சந்தோஷப்படுத்த வில்லை, கேட்டதை வாங்கிதரவில்லை, திருமதி செல்வம் சேர்ந்து பார்ப்பதில்லை என்றா? வழக்கே வினோதம் என்றால் அதை விட வினோதம் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.
பெண்களை வளரவிடாமல் தடுப்பது அடிமைத்தனம்தான், அதற்காக எல்லா பிரச்சனைக்கும் கோர்ட் படி தேடுவது தங்கள் responsibilityயை தட்டி கழிப்பதாகும். அடிமைத்தனம் இருக்கட்டும் common sense ஒன்றை பயன்படுத்தினால் பல பிரச்சனைகள் பிரச்சனைகளாவே படாது.