தொகுப்பு

Posts Tagged ‘ஜநாக்ஸ்’

வாரயிறுதி

அக்டோபர் 11, 2009 மறுமொழியவும்


உன்னைப்போல் ஒருவன் பைசா வசூல். மோகன்லால் ஏமாற்றவில்லை, நிறைவாக நடித்திருக்கிறார். கமல் பரோடா முஸ்லீம் பெண்ணுக்காக அழும் வரையில், ‘a wednesday’ இட்ட தண்டவாளத்தில் சரியாக பயணித்தது.

ஜநாக்ஸ் அனுபவம் ஏமாற்றவில்லை. ஸ்கீரின், ஆடியோ எந்த அளவுக்கு முக்கியமோ, அதை விட முக்கியம் சக ரசிகர்கள். வசனத்தை மறைக்காத கை தட்டல், காதை கிழிக்காத விசில், காண்பனுவத்தை [சுரேஷ் கண்ணன் - பிச்சை பாத்திரம்]கூட்டும். இருட்டில் நிறைய புன்முறவலை தந்த வசனங்களுக்கு நன்றி.  மற்றொரு நன்றி, கமிஷனர் நாயர் இல்லாமல் இரிஞ்சல்காடு ராகவன் மறர் என்று மாற்றியதற்கு.

ஸ்ருதி நான் பயந்தது போல அலறல் பிண்ணனி சேர்க்காமல் , மெளனங்களை தூவ விட்டுருக்கிறார். மோகன்லால் “இவங்கள இன்னிக்கி விட்டு அப்புறமா பிடிக்கலாம் , live or dead ” முதலிலேயே ஹின்ட்  கொடுத்து விடுகிறார்.

But would the film have been just as successful had it not left behind the poetry of the original and crossed over into the realm of hard-hitting prose? I don’t know. Perhaps, with the story being a tough sell, it made sense to be more direct, more in-your-face, so as to play better with audiences across the state (as opposed to a “sophisticated” audience in a handful of Chennai multiplexes; after all, if the numbers of poetry lovers are limited across the length and breadth of the country, what sense does it make to chase them across the length and breadth of a state?). Of course, I’m just speculating. After all, we have had gentle poets like Mahendran and Balu Mahendra, who, at one point, made extremely successful films while hewing to their subtle sensibilities. But perhaps that audience doesn’t exist anymore – and, really, when the prose proves as effectual as poetry, why complain?

பரத்வாஜ் ரங்கன் சொன்னது போல் உ.போ.ஒ.வின் வெற்றி புதிய வாசலை திறந்து வைக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் கு.பூ,கொ.பு., வைகை போன்ற இம்சைகள் தொடராமல் இருக்க வழி செய்யும்.  தமிழக ரசிகர்கள் இல்லாவிட்டாலும் , பிற மாநில , சர்வதேச மல்டிபில்க்ஸ் ரசிகர்கள் இப்படங்களை வரவேற்கவும், வெற்றி படங்களாக்கவும் செய்வார்கள், “content is the king, shown in an unpretentious way” என்ற வரையில்.

நாடோடிகள் மல்டிபிள்க்ஸ் சினிமாவின் எதிர்மறை பக்கம்.  மச்சான் வாடா பொங்கல போடலாம் என்று ஒரே பைக்கில் மூன்றாக பயணித்து, அம்மா சத்தம் போடு வரையில் , வீட்டு வாசலில் அரட்டை அடிக்கும் tier 3 வாலிபர்கள், நம்ம மாப்புள லவ்வாகிட்டான், தூக்குவோமா என்று அரை பவுன் மோதிரமும் ,முக்கா, பவுன் சங்கிலியும் அடகு வைக்க துடிக்கும் யதார்த்த small town guys.

சுந்தர் சி.பாபு அவரின் இசைக்கெனவே , படங்கள் தேர்வு செய்வதில் வல்லவராகிவிட்டார். பரணி , அபிநயா நிறைவாய் செய்துள்ளார்கள். ஆடல், மிகை உணர்ச்சி சசிகுமாருக்கு ஒவ்வாத வகையறாக்கள், திணறத்தான் செய்கிறார். கமர்சியல் சினிமாவுக்கும், மசாலா சினிமாவுக்கும் இடையில் ஒரு இடத்தை சலனமில்லாமல் நிரப்புகிறது. சமுத்திரகனிக்கு இது deserving தான், படம் எனக்கு பிடிச்சிருக்கு என்கிற வரையில் 30 ரூபாய், 40 ரூபாய் சம்பாதித்தாலே போதும் , சினிமா தியேட்டர்கள் கல்யாண கூடாரமாக்காமல் இருக்க.

Follow

Get every new post delivered to your Inbox.