தொகுப்பு

Posts Tagged ‘கவிஞர் வைரமுத்து’

என் வீட்டு தோட்டத்தில்

பெப்ரவரி 4, 2009 மறுமொழியவும்

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே                   (என் வீட்டு)

வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய்பூட்டு சத்தமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது

ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிபூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ

உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே                   (உன் வீட்டு)

சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம் அனுபவமோ         (என் வீட்டு,உன் வீட்டு)

பாடல் : கவிஞர் வைரமுத்து
படம் : ஜென்டில்மேன்
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

மடை திறந்து

பெப்ரவரி 1, 2009 மறுமொழியவும்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் குயில் நான்
இசை கலைஞன் என்னாசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞாலம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே (2)
விரலிலும் குரலிலும் சுவரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
(மடை திறந்து தாவும்)

நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம் (2)
இசைகென்ற இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
(மடை திறந்து தாவும்)

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை  : இளையராஜா
படம்   : நிழல்கள்

திருமண மலர்கள்

பெப்ரவரி 1, 2009 மறுமொழியவும்

திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!
கனிவாய் கனிவாய் மரமே!
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும்போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு

அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை

இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில்கைறு கட்டிவிட்டவன்
எவனோதாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசுயிடும் ஓசை கேட்டே -
மனசில் உள்ள பாஷை சொல்வாய்!
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்

தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!
கனிவாய் கனிவாய் மரமே!
நதியும் கரையும் அருகே!
நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்  வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை : வித்யாசாகர்
படம் : பூவெல்லாம் கேட்டு பார்

இளைய நிலா பொழிகிறதே

ஜனவரி 26, 2009 மறுமொழியவும்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும் (2)

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும் (இளைய நிலா)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (2)

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை  : இளையராஜா

புத்தம் புது பூமி வேண்டும்

ஜனவரி 25, 2009 மறுமொழியவும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு (புத்தம் புது)

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும் (புத்தம் புது)

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
படம் : திருடா திருடா

மின்னலே நீ வந்ததேனடி

ஜனவரி 24, 2009 மறுமொழியவும்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமேனடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிபோன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
படம் : மே மாதம்

Follow

Get every new post delivered to your Inbox.