தொகுப்பு

Posts Tagged ‘எஸ்.பி.பாலசுப்பிரமணியம்’

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

ஜனவரி 31, 2009 மறுமொழியவும்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல

இது நாடா இல்ல வெறும் காடா
இதை கேட்க யாரும் இல்லை தோழா   (2 )

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றி தவிக்குது

எத்தனை காலம் இப்படி போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்

ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

ஆத்துக்கு பாதை இங்கு யாரு தந்தது
தானாக பாதை  கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒண்ணு படிக்குது

எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே

சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

படம்           :  உன்னால் முடியும் தம்பி
இசை          :  இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

வா வெண்ணிலா

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே  ஊர்கோலமாய் போவதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ  எனக்கது போதும்

எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்

உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )

படம் : மெல்ல திறந்தது கதவு
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் , இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

Follow

Get every new post delivered to your Inbox.