கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுபோர்முன் படைத்தாய் கண்ணா
இனம் பார்த்து என்னைச்சேர்க்க மறந்தாய் கண்ணா
இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (கண்ணா கருமை)
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போன்ற நினைவொன்றை வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா கருமை)
படம் : நானும் ஒரு பெண்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
ததொம் ததொம் ததொம் ததொம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கல்ந்தோம்
ததொம் ததொம் ததொம் ததொம்
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் வெள்ளை நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )
படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ எனக்கது போதும்
எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )
படம் : மெல்ல திறந்தது கதவு
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் , இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
Categories: இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, திரையிசை பாடல்கள்
குறிச்சொற்கள்:இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ். ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், திரைப்பட பாடல்கள், பாடல்கள், மெல்ல திறந்தது கதவு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன பிறந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?
நான் கேட்டு தாய்தந்தை படைத்தானா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? (தெய்வம் தந்த வீடு)
வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? (தெய்வம் தந்த வீடு)
தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? (தெய்வம் தந்த வீடு)
படம் : அவள் ஒரு தொடர்கதை
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்