செப்டம்பர் 29, 2009
woven
நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் -அன்று
நான் வழி அறிந்தேன் உன் பாதையில்
நான் எனை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே – இன்று
நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே (நான் மொழி)
நல்லதொரு பூவாசம் நானறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நானறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நானறியேன்
காற்றை போல வீசியவள் கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள் ஊமையாகி போனதெங்கே
வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே (நான் மொழி)
கண்ணிமையில் ஓர் ஆசை ஊஞ்சல் இடும் வேளையில்
உண்மைகளை உள் மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க ஆசைபட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை நியாமில்லை
மேகம் நீங்கி போகும் என நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழப்போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதுமில்லை (நான் மொழி)
படம் : கண்டேன் காதலை
இசை : வித்யாசாகர்
பாடியவர் : சுரேஷ் வாட்கர்
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் கால காட்டில் ஏன் வாடுதோ
மேகம் தன்னில் மேகம் மோதி
மின்னல் மின்னுதோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ (யார் வீட்டில்)
ராகங்கள் நூறு அவள் கொடுப்பாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னை தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று
வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போல் ஆடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே (யார் வீட்டில்)
வான் மேகம் மோதும் மழை தனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம்
காணும் அன்பின் இல்லம்
ஒர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையை தாண்டுமோ
நியாங்கள் வாய் மூடுமோ
தெய்வம் இல்லை என்று போகுமோ (யார் வீட்டில் )
படம் : இதயம் ஒரு கோவில்
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை
மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுபோர்முன் படைத்தாய் கண்ணா
இனம் பார்த்து என்னைச்சேர்க்க மறந்தாய் கண்ணா
இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (கண்ணா கருமை)
பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போன்ற நினைவொன்றை வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா கருமை)
படம் : நானும் ஒரு பெண்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வாவா இதில்
முதலும் முடிவும் என்ன (வானம் கீழே )
இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் (2)
தினமும் மனமும் குதிரையில் பறக்கும்
ஊஞ்சல் போலே என்னுள்ளம் ஆடும்
மேலும் மேலும் வேகம் கூட
மேலும் மேலும் மேகம் கூட
நானும் இங்கே காணும் இன்பம்
இரவும் நிழலும் கடலோ கனவோ (வானம் கீழே )
பறவை மிருகம் அழுவது இல்லை
கவலை கடலில் விழுவது இல்லை
கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை
நானும் கூட பறவை ஜாதி (2)
பழகிப்பார்த்தால் தெரியுது சேதி
தினமும் மனம் போல் திரியும் குருவி (வானம் கீழே )
இசை : இளையராஜா
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
மழை நின்ற பின்பும் தூரல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு பேரும் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா (மழை நின்ற)
நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசையமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நானிருந்தும்
தாகமினும் அடங்கவில்லை
பாதம் இரண்டு நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழைத்துளி பனித்துளி கரைந்தபின்னே
அது மறுபடி இரண்டென பிறந்திடுமா (மழை நின்ற)
கண்ணிமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்ல அழைகிறதே!
உன் செவியில் விழவில்லையா?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே!
உன்னருகில் நானிருந்தும்
உண்மை சொல்ல துனிவு இல்லை
கைகளிலே விரலிருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்.
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்.
தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு (மழை நின்ற)
படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யாசாகர்
முதல் முறை உன்னை பார்த்த போதே
பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ
உலகத்தில் உன் முகம் தான் பிடிக்கிறதே
கனவினில் உன்னை பார்க்கும் போதும்
அருகினில் என்னை காண வேண்டும்
உன்னருகே நான் இருந்தால சிலிர்கிறதே
நீ விளையாட்டு பிள்ளை – உனக்கு நான்
தலையாட்டும் பொம்மை
எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே
( முதல் முறை)
நீ அருகில் தோன்றும் நேரமே
வானிலையும் மாறிப் போகுதே
நீயும் நினைத்தால்
வானவில் வந்து விடுமே
உன் மனதில் தோன்றும் வார்த்தையே
என் உதடும் கூற வேண்டுமே
உன்னை நினைத்தால்
வாழ்விலே என்றும் சுகமே
உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன்
உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன்
நான் உன் மூச்சில் வாழும்
வரமது எந்நாளும் போதும்
நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே
( முதல் முறை)
நீ நடந்து போகும் வேளையில்
கால் வலிக்கும் என்று கலங்குதே
தோளில் சுமந்தே தாங்குவேன்
உன்னை தினமே
தோளிரண்டில் என்னை தூக்கினால்
நாள்கணக்கில் அங்கு தூங்குவேன்
நானும் உனையே தாங்குவேன்
நெஞ்சில் நினைத்தே
சூரியன் உதிப்பதே
ஒரு முறை காணவே
பூமியில் பிறந்ததே
உன்னுடன் வாழவே
அந்த மழை மேகம் யாவும்
இறங்கியே உனைத்தீண்ட ஏங்கும்
இனி கோயில் தேடி போக மாட்டேன்
தெய்வமும் நீ (( முதல் முறை)
படம் : அதே நேரம் அதே இடம்
இசை : பிரேம்ஜி
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே (என் வீட்டு)
வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய்பூட்டு சத்தமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது
ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிபூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ
உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே (உன் வீட்டு)
சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம் அனுபவமோ (என் வீட்டு,உன் வீட்டு)
பாடல் : கவிஞர் வைரமுத்து
படம் : ஜென்டில்மேன்
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே (விழியிலே )
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன்விளக்கே தீபமே (விழியிலே )
ஓவியனும் வரைந்ததில்லையே உனைப் போல்
ஓரழகை கண்டதில்லையே (2)
காவியத்தின் நாயகி கற்பனையின் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கோடி (விழியிலே )
கையளவு பழுத்த மாதுளை
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோமினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே (விழியிலே )
பாடல் : பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை (வண்ணம்)
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள யாருமில்லை (வண்ணம்)
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன் (வண்ணம்)
படம் : சிகரம்
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
இசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் குயில் நான்
இசை கலைஞன் என்னாசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞாலம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே (2)
விரலிலும் குரலிலும் சுவரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
(மடை திறந்து தாவும்)
நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம் (2)
இசைகென்ற இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
(மடை திறந்து தாவும்)
பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை : இளையராஜா
படம் : நிழல்கள்