தொகுப்பு

Archive for பெப்ரவரி, 2011

இலக்கில்லா இலக்கியம்

பெப்ரவரி 14, 2011 மறுமொழியவும்

தினப்பத்திரிக்கையின் கால அவகாசம் மனைவி காபி டம்ப்ளரை அலசும் வரை தான். வார பத்திரிக்கை, ‘மீண்டும் பேசலாம்’ போடும் வரை தான். வாராந்திரியாகட்டும், தினசரியாகட்டும் அதன் வாசனை சிறு பெட்டகத்துள் அடைத்த ஜவ்வாது போல ,திறந்ததும் அதன் திசைக்கு ஒத்த வாசகனை தேடி நீர்த்து விடுவதற்காக எழுதியது போன்றே இருக்கும்.

பெரும்பான்மை கவிதை, கட்டுரை, கதை என்ற கட்டமைப்பில் ஒத்தே, குறுக்கிய ஓடை போல் அதன் வட்டத்துள் சிக்கும் அந்த நொடிக்கான ரசனையை மட்டுமே தாங்கி கொண்டு, ஒரு புன்னகை, வருத்தம் , சோகம் , அதிருணர்வு தாண்டிய ஆழ்ந்த சலசப்பை தராமலே,அங்கும் இங்குமாக பக்கம் தாவிச்சொல்லும் இலக்கில்லா இலக்கியம் போர்னோவை ஒத்தது

பேருந்து நிலையங்கள்

பெப்ரவரி 14, 2011 மறுமொழியவும்
எச்சில் துப்பியும், சிகரெட் தட்டியும்
பொது சொத்தாம் குப்பை தொட்டியாம்
வந்தவர் சொந்தமில்லை
சென்றவர் நொந்ததும் இல்லை.
இதில் வரவு நீ , உறவு ஏன்
எனில் பொதுஉடைமை எது? கடமை உனது
வலிந்திட துணிந்து செய்வீர்
நற்பண்பு எது சுத்தம் காண்பீர்
வீடில்லை இது ஆம்
அதில் நாமில்லை தான்
நாடில்லை இது
நாதியில்லை விடு
Follow

Get every new post delivered to your Inbox.