அக்கறை சீமை

ஜனவரி 27, 2009

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே(2)
புதுமையிலே மயங்குகிறேன் (2)
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

பார்க்க பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

சிட்டு போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
தினந்தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள்
உறவினர் போலே அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மை பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம் போலே இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

படம் : பிரியா
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

Follow

Get every new post delivered to your Inbox.