தொகுப்பு

Archive for ஜனவரி, 2009

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

ஜனவரி 31, 2009 மறுமொழியவும்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல

இது நாடா இல்ல வெறும் காடா
இதை கேட்க யாரும் இல்லை தோழா   (2 )

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றி தவிக்குது

எத்தனை காலம் இப்படி போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்

ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

ஆத்துக்கு பாதை இங்கு யாரு தந்தது
தானாக பாதை  கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒண்ணு படிக்குது

எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே

சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

படம்           :  உன்னால் முடியும் தம்பி
இசை          :  இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

உனக்கென்ன மேலே

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
ததொம் ததொம்  ததொம் ததொம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கல்ந்தோம்
ததொம் ததொம்  ததொம் ததொம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் வெள்ளை நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா  (உனக்கென்ன மேலே )

படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்

வா வெண்ணிலா

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே  ஊர்கோலமாய் போவதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ  எனக்கது போதும்

எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்

உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )

படம் : மெல்ல திறந்தது கதவு
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் , இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

தென்றல் வந்து என்னைத் தொடும்

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு  (தென்றல் வந்து)

தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது       (தென்றல் வந்து)

தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்        (தென்றல் வந்து )

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

எனக்கு பிடித்த பாடல்

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக்கூட்டுமே
உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

(எனக்கு பிடித்த )

மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

(எனக்கு பிடித்த)

வெள்ளிக்கம்பிகளைப்போலே ஒரு தூறல்போடுதோ
விண்ணும் மண்ணில் வந்துசேர அது பாலம்போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய்
வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

(எனக்கு பிடித்த)

படம்            : ஜுலி கணபதி
பாடியவர் : ஷ்ரேயா
இசை         : இளையராஜா

முத்துக்களோ கண்கள்

ஜனவரி 29, 2009 மறுமொழியவும்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன  (முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன
வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன  (முத்துக்களே)

படம் : ஊட்டி வரை உறவு
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : டி.எம்.எஸ்., பீ.சுசிலா

ஏரிக்கர பூங்காத்தே

ஜனவரி 28, 2009 மறுமொழியவும்

ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு (2)

பாதமலர் நோகுமுன்ன நடக்கும்
பாத வழி பூவிரிச்சேன் மயில (2)
ஓடம்போலாடுதே மனசு
கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது ( ஏரிக்கர பூங்காத்தே)

ஓடிச்செல்லும் வான்மேகம் நெலவ
மூடிக்கொள்ளப் பார்க்குதடி மயிலே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி…அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் தொணையா

நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு (ஏரிக்கர பூங்காத்தே)

இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

அக்கறை சீமை

ஜனவரி 27, 2009 மறுமொழியவும்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே(2)
புதுமையிலே மயங்குகிறேன் (2)
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

பார்க்க பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

சிட்டு போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
தினந்தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள்
உறவினர் போலே அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மை பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம் போலே இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

படம் : பிரியா
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு

ஜனவரி 27, 2009 மறுமொழியவும்

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன பிறந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?

நான் கேட்டு தாய்தந்தை படைத்தானா
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி
ஆதி வீடு அந்தம் காடு
இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?      (தெய்வம் தந்த வீடு)

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்
உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி
கொண்டதென்ன கொடுப்பதென்ன
இதில் தாய் என்ன மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ?   (தெய்வம் தந்த வீடு)

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்
மன்னைத் தோண்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி
என்னை தோண்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி
உன்மை என்ன பொய்மை என்ன
இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன ? (தெய்வம் தந்த வீடு)

படம் : அவள் ஒரு தொடர்கதை
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம்

ஜனவரி 27, 2009 மறுமொழியவும்

சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி

குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததோ உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி (சின்னத் தங்கம்)

மனசுக்கேத்த மாப்பிள்ளையை
உன் மனசு போல மணம் புடிப்பன்
சீமந்தமும் நடத்தி வைப்பன் – உன்
குழந்தைகளை நான் சுமப்பன்
பதினாறுகளும் பெற்று நீ வாழணும் – அதை
பார்த்து தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும் (சின்னத் தங்கம்)

படம் : சேரன் பாண்டியன்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

Follow

Get every new post delivered to your Inbox.